கோவிலுக்குள் நுழைந்து அபிஷேக பொருட்களை துவம்சம் செய்த காட்டு யானைகள்!
கோவை: கோவை மருதமலை அடிவாரம், தொண்டாமுத்தூர், ஓனாப்பாளையம், மங்கரை அடிவாரம் ஆகிய பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டூழியம் அதிகரித்ததால் சாடிவயல் யானைகள் முகாமில் இருந்து கும்கி யானை பாரி கொண்டு வரப்பட்டது.
யானைகள் வழித்தடத்தில் கும்கி நிறுத்தி வைக்கப்பட்டது. கும்கி யானை உள்ளதை அறிந்த 21 காட்டுயானைகள் கூட்டத்தில் 13 யானைகள் ஒரு பிரிவாகவும், 4 யானைகள் மற்றொரு பிரிவாகவும் மற்றவை தனித்தனியாகவும் பிரிந்தன.

மாங்கரை அடிவாரத்தில் 8 காட்டு யானைகள் நுழைந்தன. அங்கு தங்கவேல் என்பவருக்கு சொந்தமான 1 ஏக்கர் சோள காட்டில் புகுந்து பயிர்களை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தின.
நேற்று மருதமலை யானைகள் வழித்தடத்தில் வன அதிகாரிகள் கும்கி யானை பாரியை உலாவ விட்டனர். பெரும்பாலும் காட்டுயானைகள் கும்கி இருப்பதை மோப்பத்தின் மூலமே அறிந்து தப்பி ஓடிவிடும்.
நேற்று நள்ளிரவு வீடுகள் மற்றும் கூரைகளை பிரிக்கும் ஒற்றை காட்டுயானை மற்றொரு வழியாக மருதமலை அடிவாரப்பகுதிக்கு வந்தது. அங்கு அபிஷேக பொருட்கள் வைத்திருந்த கடையை உடைத்தும் பிரித்தும் உள்ளிருந்த அபிஷேக பொருட்களை தின்றும் நாசப்படுத்தியது.
நுழைவாயில் வழியே மருதமலை சுப்பிரமணிய சாமி கோவில் படிக்கட்டில் ஏறியது. 13 ஆவது மண்டபத்தில் இடும்பன் கோவில் உள்ளது. அங்கு தண்ணீர் வசதிக்காக மோட்டார் அறை அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு வந்த ஒற்றை காட்டுயானை இரும்பு பைப்புகளை உடைத்து தண்ணீரை குடித்தது. பின்னர் மோட்டார் அறையின் கதவை தந்தத்தால் குத்தியது. இதில் இரும்பு கதவு உடைந்தது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கார்ட் குமார் தலைமையிலான வன ஊழியர்கள், யானை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஒற்றை காட்டுயானையை விரட்டி விட்டனர்.
யானைகள் நடமாட்டத்தால் பக்தர்கள் மருதமலை கோவிலுக்கு வர அச்சத்தில் உள்ளனர். கும்கி யானை உதவியுடன் காட்டுயானைகளை ஆனைகட்டி மற்றும் மாங்கரை வனப்பகுதிக்குள் விரட்டும் பணி நடந்து வருகிறது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications