இன்ஸ்பெக்டராக நடித்து மோசடி செய்த மத போதகர் கைது - தமிழகத்திலும் கைவரிசை
ஊட்டி: நீலகிரி மாவட்டம் பந்தலூரில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றிவந்த "போலி இன்ஸ்பெக்டர்" கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம், கோட்டயம் பகுதியைச் சேர்ந்த குஞ்சுமோனின் மகன் சைமன் பி.பால். இவர், பந்தலூர் தாலுகா, நெல்லியாளம் பகுதியில் சாந்தி நிலையம் என்ற அமைப்பை வைத்து மதபோதகராக செயல்பட்டு வருகிறார்.
நேற்று மாலை, நீலகிரி மாவட்டம் தேவாலா அருகே உள்ள உப்பட்டி பகுதியில் நின்றுகொண்டிருந்த சைமனிடம், தேவாலா காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணி விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் முரணான பதில்களை கூறியுள்ளார்.
இதையடுத்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், சைமனின் பையில் தமிழ்நாடு இளைஞர் காவல் படையின் ஆய்வாளர் அடையாள அட்டையும், கேரள காவல் துறையின் சீருடையும், வங்கிக் கணக்குப் புத்தகத்தில் காவல் துறையில் ஆய்வாளராக பணியாற்றுவதாக புகைப்படம் மற்றும் தகவல்கள் பதிவாகியிருந்தது.
இது குறித்து, விசாரணை செய்தபோது சைமன் கேரளத்திலும், தமிழகத்திலும் போலி இன்ஸ்பெக்டராக உலா வந்தது தெரியவந்தது. இதையடுத்து, தேவாலா காவல் துறையினர் சைமனை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications