தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ஞானதேசிகன் திடீர் சஸ்பெண்ட் !

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழக தலைவர் பதவியில் இருந்து கே. ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

தமிழக அரசின் தலைமை செயலாளராக பணியாற்றிய கே.ஞானதேசிகன் அந்த பதவியில் இருந்து அண்மையில் மாற்றப்பட்டார். அவர் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன (டிட்கோ)-த்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில், தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டிருந்தார்.

 former Chief Secretary K Gnanadesikan quit his post

இந்நிலையில் கே. ஞானதேசிகன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக புதிய தலைமைச் தலைமைச் செயலராக முதல்வரின் முதல் செயலராக இருந்த பி.ராம மோகன ராவ் நியமிக்கப்பட்டார்

ராம மோகன ராவ் தமிழக அரசின் பல முக்கிய துறைகளில் பணியாற்றியுள்ளார். கடந்த முறை முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றவுடன், முதல்-அமைச்சரின் செயலாளராக நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். 1985-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தமிழ்நாட்டில் பணியில் சேர்ந்த பி.ராம மோகன ராவ், நீண்ட அனுபவமும், திறமையும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+