ஒட்டன்சத்திரம் முன்னாள் திமுக எம்.எல்.ஏ நாச்சிமுத்து காலமானார்
சென்னை: ஒட்டன்சத்திரம் தொகுதி தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. நாச்சிமுத்து கவுண்டர் இன்று காலை மரணமடைந்தார்.அவருக்கு வயது 93. உடல்நலக் குறைவு காரணமாக எம்.எல்.ஏ நாச்சிமுத்து கவுண்டர் தனது சொந்த ஊரான தேவத்தூரில் இன்று காலை மறைந்தார்.
இவரது சொந்த ஊர் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தேவத்தூர். வயது மூப்பின் காரணமாக அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த இவர் தேவத்தூரில் மணிமேகலை இளங்கோ என்ற பள்ளியை நடத்தி வந்தார்.

இவரது மனைவியும் ஏற்கனவே காலமாகி விட்டார். வளர்ப்பு மகன் வள்ளுவன் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தவறி விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது உடனடியாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
நாச்சிமுத்து அரசியல் பயணம்:
நாச்சிமுத்து கடந்த 1962ம் ஆண்டு ஒட்டன்சத்திரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டார்.அப்போது தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சேனாபதி கவுண்டரிடம் 6 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
1967-ம் ஆண்டு அண்ணா முதல்வராக இருந்த காலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பழனியப்பனை 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
1971ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பழனியப்பனை 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். தொடர்ந்து 2 முறை ஒட்டன்சத்திரம் சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.












Click it and Unblock the Notifications