நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன் ஆஜர்
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன் ஆஜராகியுள்ளார்.
சென்னை: நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன் ஆஜராகியுள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து தமிழக அரசு அமைத்த ஆறுமுகசாமி கமிஷன் விசாரித்து வருகிறது.
இந்த கமிஷன் ஜெயலலிதா உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது. இதேபோல் சசிகலா குடும்பத்தினரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன் ஆஜராகியுள்ளார். அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். மேலும் ஆறுமுகசாமி கமிஷனில் சசிகலா உதவியாளர் கார்த்திகேயனும் ஆஜராகியுள்ளார்.
இதேபோல் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சாந்தா ஷீலா நாயர் ஆஜராகியுள்ளார். ஜெயலலிதா ஆலோசகராக இருந்த சாந்தா ஷீலா நாயரை விசாரிக்க விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. இதையடுத்து சாந்தா ஷீலா நாயர் இன்று ஆஜராகியுள்ளார்.