முதுபெரும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் காலமானார்.. உடல்நலக்குறைவால் வேலூரில் உயிர்பிரிந்தது
முதுபெரும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
Subscribe to Oneindia Tamil
வேலூர்: முதுபெரும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 95
முதுபெரும் நாடாளுமன்ற உறுப்பினர், மூத்த அரசியல் தலைவர் என போற்றப்படுபவர் இரா.செழியன். இவர் 1923ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி தஞ்சையில் பிறந்தார்.

ஒரு முறை லோக்சபா உறுப்பினராகவும் 4 முறை ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்தவர். நாடாளுமன்றவாதியாகப் போற்றப்பட்ட இரா.செழியன், முன்னாள் அமைச்சர் இரா.நெடுஞ்செழியனின் இளைய சகோதரர் ஆவர்.
திமுகவில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய அவர் பின்னர் ஜனதாக் கட்சியில் இணைந்தார். விஐடி பல்கலைக்கழகத்தில் கவுரப் பேராசிரியராகவும் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது உடல் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications