இந்து முன்னணி சுரேஷ்குமார் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது!
அம்பத்தூர்: சென்னையில் நடைபெற்ற இந்து முன்னணி மாவட்ட செயலாளரான சுரேஷ்குமார் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அம்பத்தூர் எஸ்டேட் மண்ணூர்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ்குமார். திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.
கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி இவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் உட்பட 10 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.

இந்த நிலையில் கொலையாளிகளுக்கு உடந்தையாக இருந்து உதவிகள் செய்ததாக மண்ணூர்பேட்டையை சேர்ந்த முகாஜீர், ராஜாமுகமது, ஷாசிங் என்ற டோக்கிலிங், ஜப்பார் ஆகிய மேலும் 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
தற்போது கைது செய்யப்பட்ட 4 பேரும் பாடி மண்ணூர்பேட்டையை சேர்ந்தவர்கள். விசாரணையில் அவர்கள் தான் கொலையாளிகளுக்கு தங்குவதற்கு இடம், உணவு போன்ற அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்து உதவி செய்துள்ளனர்.
மேலும் சுரேஷ்குமாரை கொலை செய்வது குறித்தும் பாடியில் உள்ள அலுவலகத்தில் தான் அவர்கள் தீட்டம் தீட்டியுள்ளனர். சுரேஷ்குமாரை அடுத்து மேலும் சில தலைவர்களுக்கு அவர்கள் குறி வைத்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
நேற்று கைதான 4 பேரையும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட 9 பேர்களையும் திருவள்ளூர் மாவட்ட கோர்ட்டில் நீதிபதி முகமது ஜபருல்லாகான் முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள்.
அவர்களை 22 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இவர்கள் அனைவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications