இந்து முன்னணி சுரேஷ்குமார் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது!
அம்பத்தூர்: சென்னையில் நடைபெற்ற இந்து முன்னணி மாவட்ட செயலாளரான சுரேஷ்குமார் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அம்பத்தூர் எஸ்டேட் மண்ணூர்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ்குமார். திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.
கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி இவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் உட்பட 10 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.

இந்த நிலையில் கொலையாளிகளுக்கு உடந்தையாக இருந்து உதவிகள் செய்ததாக மண்ணூர்பேட்டையை சேர்ந்த முகாஜீர், ராஜாமுகமது, ஷாசிங் என்ற டோக்கிலிங், ஜப்பார் ஆகிய மேலும் 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
தற்போது கைது செய்யப்பட்ட 4 பேரும் பாடி மண்ணூர்பேட்டையை சேர்ந்தவர்கள். விசாரணையில் அவர்கள் தான் கொலையாளிகளுக்கு தங்குவதற்கு இடம், உணவு போன்ற அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்து உதவி செய்துள்ளனர்.
மேலும் சுரேஷ்குமாரை கொலை செய்வது குறித்தும் பாடியில் உள்ள அலுவலகத்தில் தான் அவர்கள் தீட்டம் தீட்டியுள்ளனர். சுரேஷ்குமாரை அடுத்து மேலும் சில தலைவர்களுக்கு அவர்கள் குறி வைத்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
நேற்று கைதான 4 பேரையும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட 9 பேர்களையும் திருவள்ளூர் மாவட்ட கோர்ட்டில் நீதிபதி முகமது ஜபருல்லாகான் முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள்.
அவர்களை 22 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இவர்கள் அனைவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications