கமகமக்கும் கூடலூர்: மூக்கை துளைக்கும் வாசனை திரவிய கண்காட்சி.. மணமணக்கும் 300 கிலோ வள்ளுவர் தேர்!
கூடலூரின் 8-வது வாசனை கண்காட்சியினை இன்று ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
Recommended Video

நீலகிரி: கோடை விழாவின் ஒரு பகுதியாக கூடலூரில் இன்று வாசனை திரவியங்கள் கண்காட்சி நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா நடைபெற்று வருகிறது, அதன் ஒருபகுதியாக கூடலூரில் 8வது வாசனை பொருட்கள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் ராஜ்யசபா உறுப்பினருமான கே.ஆர்.அர்ஜுனன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு கூடலூர் சட்ட மன்ற உறுப்பினர் திராவிடமணி முன்னிலை வகித்தார். இந்த வாசனை பொருட்கள் கண்காட்சியில் பழங்குடியினர் மற்றும் இயற்கை விவசாயிகள் பல வகையான வாசனை பொருட்களினால் செய்யப்பட்ட பொருட்களை கண்காட்சியில் கொண்டு வைத்திருந்தனர்.
இந்த கண்காட்சியின் சிறப்பு அம்சமாக தமிழர்களின் பண்பாட்டு சின்னமான வள்ளுவர் கோட்ட தேர் 300கிலோ எடையில் மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்ததை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதனை கண்ட சுற்றுலா பயணிகள் உட்பட அனைத்து தரப்பினரும் ரசித்து பார்த்து செல்பிஎடுத்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications