5 தமிழக மீனவர்களை விடுவித்தது போல 3 ஈழத் தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும்- வேல்முருகன் கோரிக்கை
சென்னை: இலங்கையில் பொய் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 ஈழத் தமிழர்களையும் விடுதலை செய்ய மத்திய அரசு, இந்திய தூதரகம் தலையிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தின் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் 2011ஆம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி பாரம்பரியமாக மீன்பிடிக்கும் இடத்தில் மீன்பிடித்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் 5 தமிழக மீனவர்கள் மீதும் போதைப் பொருள் கடத்தியதாக பொய் வழக்கு தொடரப்பட்டது. இவர்களுடன் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த முத்துராஜா கமல் கிறிஸ்டியன், ஞானப்பிரகாசம் துசாந்தன் மற்றும் கிறிஸ்துராசா கில்மெட்ராஜ் ஆகிய ஈழத் தமிழர்களும் இந்த வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்டனர்.
இந்த 8 பேருக்கும்தான் கொழும்பு உயர்நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த வழக்கில் பெரும் போராட்டங்களுக்குப் பின்னர் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்களின் தண்டனை ரத்து செய்யப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர்.
அதே நேரத்தில் இந்த வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்ட 3 ஈழத் தமிழ் உறவுகளுக்கான தூக்கு தண்டனையை ரத்து செய்ய இலங்கை அரசு மறுத்து வருகிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. 3 ஈழத் தமிழர் விடுதலைக்காக நம் தமிழ் உறவுகள் யாழ்ப்பாணத்தில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் சிங்களப் பேரினவாத அரசோ அவர்களது கோரிக்கையை நிராகரித்து வருகிறது.
தமிழக மீனவர்கள் 5 பேரும் மீன்பிடிக்கவே சென்றனர்.. போதைப் பொருள் கடத்தவில்லை என்று இந்திய மத்திய அரசே அறிவித்துள்ளது. இந்தியப் புலனாய்வு அமைப்புகளும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் அப்பட்டமாக பொய்யாக தொடரப்பட்ட ஒரு வழக்கில் சேர்க்கப்பட்ட 3 ஈழத் தமிழர்களை மட்டும் விடுவிக்காமல் தூக்கு தண்டனை கைதிகளாக இன்னமும் இலங்கை அரசு தூக்கு மேடையில் நிறுத்தியிருப்பது சிங்களப் பேரினவாதத்தின் கொடூர முகத்தைத்தான் காட்டுகிறது.
இந்த 3 அப்பாவி ஈழத் தமிழர்களுக்குமான தூக்கு தண்டனையையும் ரத்து செய்து அவர்களையும் உடனே விடுதலை செய்ய மத்திய அரசும், இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகமும் சர்வேதச மனித உரிமை இயக்கங்களும் இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications