உடுமலை அமராவதி அணையில் இருந்து நீர் திறப்பு.... விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!: வீடியோ
குறுவை சாகுபடிக்காக உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து 300 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: அமராவதி அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து நல்ல மழை பெய்த காரணத்தால் தமிழகத்தின் பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் குறுவை சாகுபடிக்காக உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் 7500 ஏக்கர் நிலத்தில் பயிர் சாகுபடி செய்யப்படும்.
அமராவதி அணையில் இருந்து தினமும் 300 கன அடி தண்னீர் 120 நாட்களுக்குத் திறந்துவிடப்படும். ஆனால், இந்த நீர் கரூர் கடைமடைப்பகுதிக்கும் சென்று சேர வேண்டும் என விவசாயிகள் சில நாட்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications