தமிழக அரசு நெல் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு உரிய விலை வழங்கிட ஜி.கே.வாசன் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் அனைத்தையும் உடனடியாக கொள்முதல் செய்து, நெல் மூட்டைகளுக்கு உரிய விலையை வழங்கிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி போன்ற 3 போக சாகுபடி நடைபெறுவது வழக்கம். ஆனால் மேட்டூர் அணையில் இருந்து உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி பெருமளவு குறைந்துவிட்டது. எனவே குறைந்த அளவே சாகுபடி செய்யப்பட்டு, அறுவடை செய்த நெல் மூட்டைகளை முழுமையாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.

G,k.vasan statement about rice farmers

ஆனால் தஞ்சாவூர் மாவட்டப் பகுதிகளில் விளையும் நெல் அந்தந்த பகுதிகளில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கின்றன. அதிகாரிகள் நெல்லின் ஈரப்பதத்தை காரணம் காட்டி கொள்முதல் செய்ய மறுப்பது விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தும்.

எனவே, தமிழக அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகள் அனைத்தையும் உடனடியாக கொள்முதல் செய்து, நெல் மூட்டைகளுக்கு உரிய விலையை பண்டிகை காலத்தை முன்னிட்டு கால தாமதமின்றி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாசன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+