ஜி.கே.வாசன் 50.... ரஜினிகாந்த், ஈவிகேஎஸ் இளங்கோவன் வாழ்த்து
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று தனது 50வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி முதல் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வரை பல்வேறு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
த.மா.காவை மீண்டும் தொடங்கிய பின்னர் வாசன் கொண்டாடும் முதல் பிறந்த நாள் இது என்பதால் தமாகவினர் பெரும் திரளாக வாசன் வீட்டு முன்பு குவிந்திருந்தனர்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஏ.கே.அந்தோணி, மிலிந்த் தியோரா, பிரபுல் படேல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலே உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் பலரும் வாசனுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
அதேபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பாரதீய ஜனதா கட்சி மூத்த தலைவர் இல.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ரங்கராஜன், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், தி.மு.க. முன்னாள் எம்.பி. டி.ஆர்.பாலு, விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தமிழக தலைவர்களும் வாசனை வாழ்த்தியிருந்தனர்.
வாசன் பிறந்த நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை தமாகாவினர் நடத்தி கொண்டாடினர்.












Click it and Unblock the Notifications