வாக்காளருக்கு பணப்பட்டுவாடா செய்தால் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.. ஜி. ராமகிருஷ்ணன் திட்டவட்டம்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்காளருக்கு பணப்பட்டுவாடா செய்தால் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜி. ராமகிருஷ்ணன் கோரியுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதிக்கு வரும் 12ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிட சிபிஎம் சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் லோகநாதன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
அதிமுக, திமுக, ஓபிஎஸ் அணி, தீபா என பலமுனை போட்டியால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதனிடையே சிபிஎம் சார்பில் லோகநாதன் இந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்று மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரி பிரவீன் நாயரிடம் லோகநாதன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது ஜி. ராமகிருஷ்ணன் உடன் இருந்தார்.

வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஜி. ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆர்.கே. நகர் தொகுதியில் மக்கள் சந்திக்கக் கூடிய எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காணுவதற்காக சிபிஎம் சார்பில் மக்களை அணுக இருக்கின்றோம். இந்தத் தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்வு காண வேண்டும் என்ற முழக்கத்தோடு வாக்காளர்களை சந்திக்க இருக்கின்றோம்.
ஆர்.கே. நகர் தொகுதியில் ஏற்கனவே பணபட்டுவாடா பிரச்சனையை நாங்கள் சந்தித்திருக்கிறோம். அண்மையில் நடைபெற்ற 3 தொகுதி இடைத்தேர்தலிலும், கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுச் தேர்தலிலும் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது.
அதே போன்று நடக்க இருக்கும் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்கு யார் முயற்சி எடுத்தாலும் அதை உறுதியாக தடுப்பதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணப்பட்டுவாடா செய்கிற போது கையும் களவுமாக பிடிபட்டால் அந்த வேட்பாளரின் தகுதியை நீக்கும் நடவடிக்கையையும் தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்று ஜி. ராமகிருஷ்ணன் கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications