காந்தி லலித்குமார் ஆம்பளையே இல்லை.. சீரியல் நடிகை நிலானி பரபரப்பு தகவல்
தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட காந்தி லலித்குமார் ஒரு ஆம்பளையே இல்லை என நடிகை நிலானி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட காந்தி லலித்குமார் ஒரு ஆம்பளையே இல்லை என நடிகை நிலானி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையை சேர்ந்த உதவி இயக்குநர் காந்தி லலித்குமார். சென்னையில் வசித்து வரும் இவர் சீரியல் நடிகை நிலானிலை உயிருக்கு உயிராக காதலித்தார்.
ஆனால் நிலானி திடீரென் காந்தி லலித்குமாரை விட்டு பிரிந்துள்ளார். அவரை திருமணம் செய்யவும் மறுத்துள்ளார்.

மரணம்
இதனால் விரக்தியடைந்த காந்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்தார். இதைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் திங்கள் கிழமை காலை மரணமடைந்தார்.

மெட்டி திருமணம்
இந்நிலையில் நிலாயும் காந்தியும் அன்யோன்யமாக இருந்த போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகின. அதில் நடிகை நிலானிக்கு காலில் மெட்டி போட்டு விட்டு திருமணம் செய்து கொண்டார் லலித்குமார். இதனை இருவரும் சேர்ந்து வீடியோவில் தெரிவித்துள்ளனர்.

படுக்கையறை போட்டோ
மெட்டி போட்டு விட்ட செப்டம்பர் 4 ஆம் தேதி தான் தங்களின் திருமண நாள் என்றும் இருவரும் கூட்டாக அறிவித்து மாறி மாறி முத்தம் கொடுத்துக் கொண்டனர். இந்த வீடியோக்கள் மற்றும் அவர்கள் இருவரும் படுக்கையறையில் ஒன்றாக இருக்கும் போட்டோக்களும் வெளியாகின.

கதறிய நிலானி
இந்நிலையில் நிலானி நேற்று திடீரென செய்தியாளர்களை சந்தித்து பிரஸ் மீட் கொடுத்தார். அப்போது கண்ணீர்விட்டு கதறிய அவர், லலித் குமார் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார்.

உண்மைதான்
காந்தி 3 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமானார். அவரை திருமணம் செய்ய முடிவு செய்ததும் அவருடன் பழகியதும் உண்மைதான்.

பல பெண்களை
ஆனால் காந்தி ஒரு பொம்பளை பொறுக்கி. பணத்திற்காக பல பெண்களுடன் பழகி ஏமாற்றியுள்ளார். இதனை தெரிந்துகொண்டு நான் அவரை விட்டு விலகிவிட்டேன்.

ஆம்பளையே இல்லை
லலித்குமார் ஒரு ஆம்பளையே இல்லை. ஒரு புகாரில் போலீசார் அவருக்கு கரண்ட் ஷாக் கொடுத்ததில் அவருக்கு ஆண்மை தன்மை போய்விட்டது. அவருடன் பழகியது உண்மை. ஆனால் நான் எந்த தவறுத் செய்யவில்லை. இவ்வாறு கண்ணீர் மல்க பேசினார் நிலானி.












Click it and Unblock the Notifications