பிள்ளையாரை தூக்கிச் சென்ற அதிகாரிகள்... மீண்டும் தரக்கோரி மக்கள் சாலை மறியல்!
பெரம்பலூர் அருகே அரசு அதிகாரிகள் தூக்கிச் சென்ற பிள்ளையாரை மீண்டும் அதே இடத்தில் வைக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த மரவநத்தம் கிராமத்தில் அரசமரத்தடியில் இருந்த பிள்ளையாரை அரசு அதிகாரிகள் தூக்கிச் சென்றதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிள்ளையாரை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.
மரவநத்தம் கிராமத்தில் சாலையோரம் இருந்த அரச மரத்தடியில் அப்பகுதி மக்கள் பிள்ளையார் சிலை ஒன்றை கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வைத்தனர். இந்த சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டிருப்பதாக புகார் கடிதம் வந்ததை அடுத்து அரசு அதிகாரிகள் அந்த சிலையை எடுத்து சென்றனர்.

பின்னர் அருகில் உள்ள வி.களத்தூர் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் அவர்கள் சிலையை வைத்துச் சென்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்த அப்பகுதி மக்கள் மீண்டும் சிலையை அரசமரத்தடியில் வைக்கக்கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து பெரம்பலூர் மாவட்டர் ஆர்டிஓ பேபி, தாசில்தார் மனோன்மணியம், மற்றும் கமிஷனர் ஆலயமணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானமடையாத மக்கள் அரசியல்வாதிகளின் சிலையை வைக்கத்தான் அரசு அனுமதி பெற வேண்டும் இந்து கடவுள்களின் சிலையை வைக்க அனுமதி பெற தேவையில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மீண்டும் பொதுமக்களிடம் பேசிய அதிகாரிகள் சிலையை வைப்பது தொடர்பாக அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கிறோம் எனக்கூறி உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications