பிள்ளையாரை தூக்கிச் சென்ற அதிகாரிகள்... மீண்டும் தரக்கோரி மக்கள் சாலை மறியல்!
பெரம்பலூர் அருகே அரசு அதிகாரிகள் தூக்கிச் சென்ற பிள்ளையாரை மீண்டும் அதே இடத்தில் வைக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த மரவநத்தம் கிராமத்தில் அரசமரத்தடியில் இருந்த பிள்ளையாரை அரசு அதிகாரிகள் தூக்கிச் சென்றதைக் கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பிள்ளையாரை மீண்டும் அதே இடத்தில் வைக்க வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.
மரவநத்தம் கிராமத்தில் சாலையோரம் இருந்த அரச மரத்தடியில் அப்பகுதி மக்கள் பிள்ளையார் சிலை ஒன்றை கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வைத்தனர். இந்த சிலை அனுமதியின்றி வைக்கப்பட்டிருப்பதாக புகார் கடிதம் வந்ததை அடுத்து அரசு அதிகாரிகள் அந்த சிலையை எடுத்து சென்றனர்.

பின்னர் அருகில் உள்ள வி.களத்தூர் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் அவர்கள் சிலையை வைத்துச் சென்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்த அப்பகுதி மக்கள் மீண்டும் சிலையை அரசமரத்தடியில் வைக்கக்கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து பெரம்பலூர் மாவட்டர் ஆர்டிஓ பேபி, தாசில்தார் மனோன்மணியம், மற்றும் கமிஷனர் ஆலயமணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானமடையாத மக்கள் அரசியல்வாதிகளின் சிலையை வைக்கத்தான் அரசு அனுமதி பெற வேண்டும் இந்து கடவுள்களின் சிலையை வைக்க அனுமதி பெற தேவையில்லை எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மீண்டும் பொதுமக்களிடம் பேசிய அதிகாரிகள் சிலையை வைப்பது தொடர்பாக அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கிறோம் எனக்கூறி உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications