கடுமையான தட்டுப்பாட்டில் சமையல் கேஸ் சிலிண்டர்- இன்னும் 10 நாட்களுக்கு இப்படித்தானாம்!
சென்னை: தமிழ்நாட்டில் சென்னை உட்பட பல இடங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இண்டியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், சிலிண்டகள் பழுதுபார்க்கும் பணிகளால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கேஸ் சிலிண்டர்கள் சர்வீஸ் செய்யப்படுவது அவசியமானதாகும்.

பராமரிப்பு பணிகள்:
3 அல்லது 4 நாட்களுக்குள் பழுது பார்க்கும் பணிகள் முடிவடைந்துவிடும். சிலிண்டர்களும் மீண்டும் விநியோகிக்கத் தொடங்கப்படும்.

மீண்டும் விநியோகம்:
இந்த பணியின் அடிப்படையில், சென்னையில் தினமும் 50 சிலிண்டர்கள் என்ற எண்ணிக்கையில் பழுது பார்க்கப்பட்டு மீண்டும் விநியோகம் செய்யப்படுகின்றன.

பழசுக்கு புதுசு:
இதுமட்டுமில்லாமல் தமிழகம் முழுக்க பழைய சிலிண்டர்களுக்கு பதிலாக புதிய சிலிண்டர்கள் மாற்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

1 கோடி வாடிக்கையாளர்கள்:
தமிழகம் முழுவதும், 1 கோடியே 4 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 12 லட்சத்து 62 ஆயிரம் பேருக்கு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

2 சிலிண்டர்கள்:
இவர்களில் 50 சதவீதம் பேர் 2 சிலிண்டர்கள் வைத்துள்ளனர். 1 லட்சத்து 85 ஆயிரத்து 500 பழைய சிலிண்டர்களை எடுத்துவிட்டு, அதற்கு பதிலாக புதிய சிலிண்டர்களை விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு முழுதும் விநியோகம்:
90 ஆயிரம் சிலிண்டர்கள் சென்னையிலும், மீதம் உள்ள 95 ஆயிரத்து 500 சிலிண்டர்கள் இதர மாவட்டங்களின் மற்ற பகுதிகளிலும் விநியோகம் செய்யப்பட உள்ளது.

தட்டுப்பாடு தீர 10 நாட்கள்:
டேராடூன், ஆந்திரா போன்ற இடங்களில் இருந்து இந்த சிலிண்டர்கள் இன்னும் 3 முதல் 4 நாட்களுக்குள் வந்து சேரும் என்றும், அதன்பிறகு படிப்படியாக 10 நாட்களுக்குள் விநியோகிக்கப்படும். அதனால் சிலிண்டர் தட்டுப்பாடு குறைய இன்னும் 10 அல்லது 15 நாட்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications