சசிகலா சம்மதத்திற்காக 2 மணி நேரம் நீடித்த பொதுக்குழு… நிர்வாகிகள் காத்திருப்பு
அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வி.கே. சசிகலாவின் சம்மதத்தை அறிவிப்பதற்காக பொதுக் குழு கூட்டம் 2 மணி நேரம் நீடிக்கப்பட்டது.
சென்னை: பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்து அதிமுக பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சசிகலா ஒப்புதல் தெரிவிக்கும் வரை பொதுக் குழு கூட்டம் 2 மணி நேரம் நீடிக்கப்பட்டது. அதுவரை அதிமுக நிர்வாகிகள் பொதுக் குழு கூட்டத்தில் காத்திருந்தனர்.
அதிமுகவின் பொதுக் குழுக் கூட்டம் இன்று சென்னை வானகரம் ஸ்ரீவாரி வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதலாவதாக ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தை கண்ணீர் மல்க முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் வாசித்தார்.

இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் மிக முக்கியமான தீர்மானமான ஜெயலலிதாவிற்குப் பின்னர் வி.கே. சசிகலாவிடம் அதிமுக தலைமை பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தின் நகலை எடுத்துக் கொண்டு முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு போயஸ் கார்டன் நோக்கிப் பறந்தது. அங்கு சென்ற அந்தக் குழு சசிகலாவிடம் தீர்மான நகலை ஒப்படைத்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவின் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்க சசிகலா சம்மதம் தெரிவித்தார் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அதே நேரத்தில், வானகரத்தில் நடைபெற்ற பொதுக் குழுவிலும் 'சின்னம்மா' சம்மதம் தெரிவித்தார் என்று அறிவிக்கப்பட்டது. இதன் பிறகே கூட்டம் முடிவடைந்து நிர்வாகிகள் வீட்டிற்கு கிளம்பினர்.
ஒரு மணிநேரம் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டிருந்த அதிமுக பொதுக் குழுக் கூட்டம் இன்று சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. சசிகலா பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வேண்டும் என்ற தீர்மான நகலைப் பெற்றுக் கொண்டு சசிகலா வானகரம் வந்து நன்றி தெரிவிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தீர்மான நகலை சசிகலா பெற்று சம்மதம் தெரிவித்தாரே தவிர பொதுக்குழுவிற்கு வரவில்லை.
இதனால், காலை 9.30 மணிக்கு தொடங்கி 10.30 மணிக்கு முடிய வேண்டிய கூட்டம் சுமார் 2 மணி நேரம் தாமதமாக 12.30 மணியளவில் முடிந்தது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications