நான் டிஜிபி ஆவதை தடுக்க நடந்த சதி- ஜார்ஜ் பரபரப்பு புகார்
Recommended Video

சென்னை: நான் டிஜிபி ஆவதை தடுக்க நடந்த சதிதான் இந்த குட்கா ஊழல் புகார் என்று முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
குட்கா ஊழல் தொடர்பாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் 35 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. அச்சமயம் குட்கா ஊழலில் தொடர்புடையதாக டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் பிவி ரமணா ஆகியோர் வீடுகளில் சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் இதுகுறித்து நொளம்பூரில் உள்ள ஜார்ஜ் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் என் வீட்டில் நடந்த சிபிஐ சோதனையில் வீட்டுக் கடன் பத்திரம் மற்றும் எல்ஐசி பத்திரங்களை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர். குட்கா குடோன் என கூறப்பட்ட இடத்தில் நடத்திய சோதனையில் புகையிலைப் பொருள் எதுவும் இல்லை.
குட்கா விற்பனை போன்ற பெரிய விவகாரம் காவல் ஆணையரின் ஆதரவுடன் மட்டுமே நடக்குமா? குட்கா விஷயத்தில் என்னைக் குறிவைத்து செயல்படுவது மிகவும் வருத்தமாக உள்ளது.
நான் டிஜிபி ஆவதைத் தடுக்க திட்டமிட்டு சதி நடந்துள்ளது. டிஜிபி ஆவதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் என்னை இந்த ஊழலில் சிக்க வைத்தனர். இந்த ஊழலில் டிஜிபி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. தமிழகத்தில் குட்கா ஊழல் நடந்தது உண்மைதான். ஆனால் யாருக்கு தொடர்பு என்பது எனக்கு தெரியாது.
அதுபோல் லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் யாருக்கு எவ்வளவு லஞ்சம் வழங்கினார்கள் என்பது எனக்கு தெரியாது என்று ஜார்ஜ் கூறினார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications