பெரிய மரத்தை அசால்டா சாய்த்த பேய்க்காற்று: வீடியோ#CycloneVardah
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை எழும்பூரில் பெரிய மரம் ஒன்றை பேய்க்காற்று சாய்த்த வீடியோ வெளியாகியுள்ளது.
வர்தா புயல் கரையை கடக்கின்றேன் என்று கூறி சென்னையை அலங்கோலப்படுத்திக் கொண்டிருக்கிறது. கனமழை ஒரு புறம், பேய்க்காற்று மறுபுறம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

சென்னையில் பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை வரலாற்றிலேயே முதல்முறையாக மணிக்கு 192 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியுள்ளது.
இந்நிலையில் எழும்பூர் ஸ்ரீபவன் ஹோட்டல் அருகே பெரிய மரம் ஒன்று பேய்க்காற்றால் சாய்ந்துள்ளது. மரம் மெது மெதுவாக ஆடி, சாய்ந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
நாடா தடம் தெரியாமல் கரையை கடக்க வர்தா ருத்ரதாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications