சென்னையில் பயங்கரம்... 2 வயது குழந்தையை பலாத்காரம் செய்த 24 வயது காமக்கொடூரன்!
சென்னை: சென்னையில் 2 வயது குழந்தையை 24 வயது இளைஞர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த பெருங்குடி கள்ளுகுட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்த கூலி தொழிலாளியின் இரண்டு வயது மகளை நேற்று மதியம் முதல் காணவில்லை. எனவே, அக்கம்பக்கத்தில் அக்குழந்தையை பெற்றோர் தேடியுள்ளனர்.

அப்போது அருகில் இருந்த வீடு ஒன்றில் வாய் கட்டப்பட்ட நிலையில் குழந்தையைக் கண்டுபிடித்துள்ளனர். அப்போது குழந்தையின் பிறப்பிறுப்பில் ரத்தம் வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
குழந்தைக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு மருத்துவமனைகள் மறுத்தையடுத்து நீண்ட போராட்டத்திற்குப்பின், இரவு 9மணியளவில் அவர் திருவல்லிகேணி தாய்சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த சிகிச்சை திருப்திகரமானதாக இல்லை என ஆர்.எம்.ஓ.விடம் கள்ளுக்குடி மக்கள் நலச் சங்கத்தின் செயலாளர் ஆனந்தன் முறையிட்டிருக்கிறார்.
அதற்கு, 'குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிப்பதாகவும் பெரிய அளவிளான பாதிப்பு எதுவும் இல்லை என்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அளித்து இருப்பதாகவும் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் இருப்பதை அதன் பின்னர் உறுதிபடுத்துவதாகவும்' மருத்துவமனை நிர்வாகம் பதில் அளித்திருக்கிறது.
இதற்கிடையே போலீசாரின் விசாரணையில் வெளியூரில் இருந்து உறவினர் வீட்டுக்கு வந்த விஜி என்ற இளைஞன் அந்த சிறுமியை வண்கொடுமை செய்திருப்பதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள குற்றவாளியை தேடி வருகின்றனர்.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications