சென்னையில் பயங்கரம்... 2 வயது குழந்தையை பலாத்காரம் செய்த 24 வயது காமக்கொடூரன்!
சென்னை: சென்னையில் 2 வயது குழந்தையை 24 வயது இளைஞர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த பெருங்குடி கள்ளுகுட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்த கூலி தொழிலாளியின் இரண்டு வயது மகளை நேற்று மதியம் முதல் காணவில்லை. எனவே, அக்கம்பக்கத்தில் அக்குழந்தையை பெற்றோர் தேடியுள்ளனர்.

அப்போது அருகில் இருந்த வீடு ஒன்றில் வாய் கட்டப்பட்ட நிலையில் குழந்தையைக் கண்டுபிடித்துள்ளனர். அப்போது குழந்தையின் பிறப்பிறுப்பில் ரத்தம் வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
குழந்தைக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு மருத்துவமனைகள் மறுத்தையடுத்து நீண்ட போராட்டத்திற்குப்பின், இரவு 9மணியளவில் அவர் திருவல்லிகேணி தாய்சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்த சிகிச்சை திருப்திகரமானதாக இல்லை என ஆர்.எம்.ஓ.விடம் கள்ளுக்குடி மக்கள் நலச் சங்கத்தின் செயலாளர் ஆனந்தன் முறையிட்டிருக்கிறார்.
அதற்கு, 'குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிப்பதாகவும் பெரிய அளவிளான பாதிப்பு எதுவும் இல்லை என்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அளித்து இருப்பதாகவும் எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் இருப்பதை அதன் பின்னர் உறுதிபடுத்துவதாகவும்' மருத்துவமனை நிர்வாகம் பதில் அளித்திருக்கிறது.
இதற்கிடையே போலீசாரின் விசாரணையில் வெளியூரில் இருந்து உறவினர் வீட்டுக்கு வந்த விஜி என்ற இளைஞன் அந்த சிறுமியை வண்கொடுமை செய்திருப்பதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள குற்றவாளியை தேடி வருகின்றனர்.
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
விளாத்திகுளம் மாணவி கொலையில் குற்றவாளி சிக்கியது எப்படி? - தென் மண்டல ஐஜி விளக்கம்! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள்












Click it and Unblock the Notifications