கடினமான கணிதத்தேர்வு... சிதம்பரம் ப்ளஸ் டூ மாணவி தற்கொலை
சிதம்பரம்: ப்ளஸ் டூ கணிதக் கேள்வித்தாள் கடினமாக இருந்த காரணத்தால் தேர்வை சரியாக எழுதாத மாணவி விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ப்ளஸ் டூ தேர்வுகள் கடந்த 3ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு வேதியியல் தேர்வு, கணிதத்தேர்வு கடினமாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர்.
நடந்து முடிந்த கணிதத் தேர்வு கடினமாக இருந்ததால் சிதம்பரம் நந்தனார் பள்ளியில் பயிலும் மாணவி அக்ஷயா என்பவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம் மாமந்தூர் கிராமத்தைச் சேர்ந்த எல்லப்பன்-செல்வி தம்பதியினருக்கு 4 மகள்கள். இவரது மகள்களில் அக்ஷயா மற்றும் அகிலா ஆகிய இருவரும் சிதம்பரம் நந்தனார் பள்ளி விடுதியில் தங்கி அப்பள்ளியிலேயே அகிலா 9ம் வகுப்பும், அக்ஷயா பிளஸ் 2 படித்து வந்தனர்.
இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வை எதிர்கொண்டவந்த அக்ஷயா கணிதத் தேர்வு கடினமாக இருந்ததாக சக மாணவியரிடம் கூறி வந்ததாகவும், எனவே மதிப்பெண் குறையக்கூடும் என கூறி சோகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று திடீரென விடுதி அறையில் தூக்கில் தொங்கியுள்ளார். இதுகுறித்து சக மாணவியர் விடுதி காப்பாளரிடம் தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து சிதம்பரம் நகர போலீசார் மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து மாணவி இருந்தது தொடர்பாக விடுதிக்குச் சென்ற சிதம்பரம் கோட்டாட்சியர் விஜயலட்சுமி, அறையில் தங்கியிருந்த சக மாணவியரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
ப்ளஸ் டூ வேதியியல் தேர்வு சரியாக எழுதாத காரணத்தால் இரண்டு மாணவிகள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications