தென்காசியில் 3 வயது சிறுமி மர்ம காய்ச்சலுக்கு மரணம்
நெல்லை மாவட்டம் தென்காசியில் 3வது பெண் குழந்தை மர்ம காய்ச்சலுக்கு மரணமடைந்த சம்பவம் பெற்றோர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
நெல்லை: தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் மரணமடைந்து வரும் நிலையில் தென்காசியில் மர்ம காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி மரணமடைந்துள்ளார்.
தென்காசி நகராட்சிக்குட்பட்ட 29 வதுவார்டு புதுமனை 5ஆம் தெருவில் வசித்து வருபவர் அபுல்ஹசன் சாதலி. இவரது 3 வயது பெண் குழந்தை பாத்திமா ஆக்கிபா இன்று மர்ம காய்ச்சலால் மரணமடைந்தார்.

இதேபோல அறந்தாங்கி அருகே 12 வயது சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு உயிரிழந்துள்ளார். தமிழகம் முழுவதும் மர்ம காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 6 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பித்தக்கது.












Click it and Unblock the Notifications