கூட்டணி பற்றி ரொம்ப லேட்டா முடிவெடுத்துவிட்டோம்.. நானே பொறுப்பு... வருந்தும் வாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூட்டணி குறித்து இறுதி முடிவெடுப்பதில் மிகவும் தாமதமானதற்கு தாமே பொறுப்பு என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

சட்டசபை தேர்தலில் தேமுதிக-ம.ந.கூட்டணியில் தமாகா கடைசி நேரத்தில் இணைந்தது. அக்கட்சிக்கு 26 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

GK Vasan on Alliance with PWF

இதனிடையே சென்னையில் ஜி.கே.வாசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான வித்தியாசமான சூழல் உருவாகி உள்ளது. இந்த சூழலில் ஆட்சி மாற்றத்தில் த.மா.கா.வும் பங்கெடுத்து அடித்தளமாக விளங்கும். மக்கள் நலக்கூட்டணி மன நிறைவான கூட்டணி. மகிழ்ச்சியான கூட்டணி.

தாமதத்துக்கு நானே பொறுப்பு

கூட்டணி குறித்து தாமதமாக முடிவு எடுத்ததற்கு நானே பொறுப்பு ஏற்கிறேன். உரிய நேரத்தில் நியாயமான இந்த கூட்டணிக்கு செல்ல முடியவில்லை. தாமதமாக சென்றாலும் எங்களை வரவேற்று அவர்களுடைய தொகுதிகளை பிரித்து எங்களுக்கு 26 தொகுதிகள் வழங்கியதை நன்றியுடன் பார்க்கிறேன்.

வருத்தம் இருக்கலாம்...

பொதுவாக எல்லா தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும். குறிப்பிட்ட தொகுதிகள் வேண்டும் என்பதில் கூட்டணி கட்சியிடம் வருத்தம் இருக்கத்தான் செய்யும். ஆனால் கிடைத்த தொகுதிகள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு உழைப்போம்.

வேட்பாளர் பட்டியல் எப்போது?

கூட்டணி பற்றி கட்சியில் இருந்த ஒரு சிலர் மட்டும் மாற்று கருத்தோடு வேறு கட்சிகளுக்கு சென்று இருக்கிறார்கள். அவர்கள் எங்கு சென்றாலும் நல்ல முறையில் இருக்க வேண்டும். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

வருகிற 20-ந்தேதி தஞ்சையில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறேன். 150 தொகுதிக்கு மேல் பிரசாரம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு வாசன் கூறினார்.

த.மா.கா. சிறுபான்மை பிரிவு மாநில தலை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+