திடீர்னு 'காணாமல்' போன ஞானதேசிகன்..!
கரூர்: கரூரில் தேர்தல் பிரசாரத்தின்போது பிரசாரத்திற்காக வந்த காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் திடீரென வேறு எங்கோ போய் விட்டதால் கட்சியினர் கடுப்பாகி விட்டனர்.
கரூர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞான தேசிகன், கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, க.பரமத்தி பகுதியில் வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சியில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்கள் குறித்தும் அதனால் கரூர் தொகுதி மக்கள் பயன்பெற்றதையும் தெரிவித்தார்.

பின்னர் க.பரமத்தி அருகே உள்ள நெடுங்கூர் எனும் கிராமத்தில் வேட்பாளர் மற்றும் கட்சியினருடன் வாக்குகள் சேகரிக்க சென்ற போது திடீரென ஞான தேசிகனை பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குளித்தலைக்கு கரூர் மாவட்ட தலைவர் பேங்க்.சுப்பிரமணியன் கூட்டிக்கொண்டு போய் விட்டார்.
பின்னர் போனில் தொடர்பு கொண்ட போது வழி தவறி சென்றுவிட்டதாகவும், பிரச்சாரத்தை நீங்களே முடித்து கொள்ளுங்கள் என வேட்பாளரிடமும், கட்சியினரிடையே ஞானதேசிகன் சொல்லியது அனைவருக்கும் வெறுப்பை ஏற்படுத்தியது.
தலைவரே இப்படி இருந்தால் பிறகு எப்படி.. !












Click it and Unblock the Notifications