இளங்கோவனைக் கட்டிப்பிடித்து, கை குலுக்கி வாழ்த்திய ஞானதேசிகன்!
சென்னை: தமிழக காங்கிரஸ் புதிய தலைவராகப் பதவியேற்றுள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கட்டிப் பிடித்து கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார் பதவி விலகிய தலைவரான ஞானதேசிகன்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று இளங்கோவன் புதிய தலைவராக பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியின்போது வித்தியாசமான பல காட்சிகளைப் பார்க்க முடிந்தது.

ஞானதேசிகன் ஆஜர்
கட்சித் தலைமை மீது சரமாரியான புகார்களைக் கூறி தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஜி.கே.வாசன் ஆதரவாளரான ஞானதேசிகன் வந்திருந்தார்.

கட்டிப்பிடித்து கை குலுக்கி
அவர் இளங்கோவனை கட்டிப்பிடித்து, கைகுலுக்கி வாழ்த்தி வரவேற்றார்.

குமரியார்
மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கியபோது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த குமரி அனந்தன் வந்திருந்தார்.

ஜெயந்தி நடராஜன்
ப.சிதம்பரத்தின் தீவிர எதிர்ப்பாளரான முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் வந்திருந்து இளங்கோவனை வாழ்த்தினார்.

குமரி அனந்தன் தம்பியும்
குமரி அனந்தனின் தம்பியும், தலைவர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவருமான எச்.வசந்தகுமாரும் வந்திருந்தார்.

விஜயதாரணி
தனிக் கோஷ்டியாக செயல்பட்டு வரும் எம்.எல்.ஏ. விஜயதாரணி வந்திருந்து இளங்கோவனை வாழ்த்தினார்.












Click it and Unblock the Notifications