தகிக்கும் தமிழகம்.. இணையத்தை உலுக்கும் திரும்பி செல்லுங்கள் மோடி! #gobackmodi
பிரதமர் மோடி சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ''கோ பேக் மோடி'' (#gobackmodi)என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
Recommended Video

சென்னை: பிரதமர் மோடி சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ''கோ பேக் மோடி'' (#gobackmodi)என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
சென்னையில் நடக்கும் ''டிஃபேஎக்ஸ்போ 2018'' எனப்படும் ராணுவ மற்றும் தொழில்நுட்ப கருத்தரங்கில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். நேற்று தொடங்கிய இந்த கருத்தரங்கு 14ம் தேதி வரை நடைபெறும்.
இந்த கருத்தரங்கில் ராணுவம் தொடர்பான பல முக்கிய கையெழுத்துகள் இடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடிக்கு எதிராக ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏன்
பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருப்பு கோடி போராட்டம் அறிவித்து இருந்தது. காவிரி மேலாண்மை வாரிய பிரச்சனை தொடங்கி பல விஷயங்களில் மத்திய அரசு தமிழக மக்களுக்கு துரோகம் செய்துவிட்டதாக கூறி மோடியின் வருகைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக ''கோ பேக் மோடி'' என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
|
காவிரி போராட்டம்
பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி விழா நடக்கும் இடம் வரை நிறைய பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. இதை யாராவது தாக்க வழி இருக்கிறது என்பதற்காக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவோடு இரவாகா அதில் கருப்பு பெயிண்டில் காவிரி என்று எழுதி எதிர்ப்பை போராட்டகாரர்கள் பதிவு செய்துள்ளனர்.
|
தமிழக மக்களை ஏமாற்ற முடியாது
இவர் ''''கோ பேக் மோடி'' என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. மக்களுக்கு மோடியை பற்றி தெரிகிறது. மோடியால் குஜராத் மக்களை ஏமாற்றியது போல தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது. சீக்கிரம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மட்டுமே ஒரே தீர்வு'' என்று குறிப்பிட்டுள்ளார்.
|
எங்களுக்கு வேண்டாம்
இவர் ''தண்ணீர் இல்லை என்றால் ராணுவ கண்காட்சி எதற்கு எங்களுக்கு.'' என்று காவிரி பிரச்சனை பற்றி பேசியுள்ளார்.
போர் ஆமா போர்
இவர் ''ஏம்பா இந்த பயணத்தை கொஞ்சம் தள்ளி போட்டு இருக்க கூடாதா?'' என்று அமித்ஷாவை பார்த்து மோடி கேட்பது போல போஸ்ட் செய்துள்ளார்'.
மக்கள் போராட்டம்
திமுக கட்சி மட்டுமில்லாமல் பெருவாரியான மக்களும் இந்த கருப்பு கோடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று இரவில் இருந்தே மக்கள் வீடு வீடாக கருப்பு கோடி ஏற்றியுள்ளனர்.
என்னா வேகம்
இந்த போராட்டங்கள் காரணமாக, மோடி சாலை வழி போக்குவரத்தை தவிர்த்துள்ளார். இதனால் மோடி சூறாவளி போல வேகமாக வந்துவிட்டு செல்வதாக கிண்டல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications