டிடிவி.தினகரன் தேர்தலில் போட்டியிட தடைக்கோரிய வழக்கு: தேர்தல் ஆணையத்தை அணுக ஹைகோர்ட் அறிவுறுத்தல்

டிடிவி.தினகரன் தேர்தலில் போட்டியிட தடைக்கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்தையும் மத்திய அரசையும் அணுக சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிடிவி.தினகரன் தேர்தலில் போட்டியிட தடைக்கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்தையும் மத்திய அரசையும் அணுக சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. வழக்கு விசாரணையையும் சென்னை உயர்நீதிமன்றம் முடித்த வைத்துள்ளது.

சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி.தினகரன் சசிகலா தரப்பு அதிமுக சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் நாளை வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளார்.

ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு சசிகலா குடும்பத்தினர் தான் காரணம் என மக்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் அதிமுகவின் கட்சி அதிகாரமும் ஆட்சி அதிகாரமும் சசிகலா குடும்பத்தினரின் வசம் சென்றுள்ளது.

தினகரனுக்கு எதிராக வழக்கு

தினகரனுக்கு எதிராக வழக்கு

இது மக்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சசிகலாவின் அக்காள் மகனான டிடிவி.தினகரன் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும்

வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும்

சென்னையை சேர்ந்த ஜோசப் என்பவர் தாக்கல் செய்த மனுவில் அன்னிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி. தினகரனுக்கு 28 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே அவரது வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும் என தேர்தல் கமி‌ஷனுக்கு கோர்ட்டு உத்தரவிட வேண்டும்.

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் மட்டுமே போட்டியிட தடை என்ற தேர்தல் நடத்தை விதியை திருத்த வேண்டும். வழக்கில் தொடர்பு இருந்தாலோ அல்லது வழக்கு நிலுவையில் இருந்தாலோ அல்லது அபராதம் விதிக்கப்பட்டாலோ தேர்தலில் போட்டியிடக் கூடாது என தடை விதிக்க வேண்டும்.

தேர்தல் ஆணையம் எற்க கூடாது

தேர்தல் ஆணையம் எற்க கூடாது

தேர்தல் ஆணையம் டி.டி.வி.தினகரனின் வேட்பு மனுவை ஏற்றுக் கொள்ள கூடாது எனவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஜோசப் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

தேர்த்ல் ஆணையத்தை அணுக அறிவுறுத்தல்

தேர்த்ல் ஆணையத்தை அணுக அறிவுறுத்தல்

அந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தையும் மத்திய அரசையும் அணுக வேண்டும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் இந்த வழக்கு விசாரணையும் சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+