குமரி: ஆற்றில் குளிக்கப்போனவர்களுக்கு அருள்பாலித்த கடவுள்... பரபரப்பு
கன்னியாகுமரி: குமரி அருகே ஆற்றில் குறிக்கப் போனவர்கள் கையில் சாமி சிலைகள் கிடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருவட்டாரில் உள்ள பரளியாறில் சிலர் குளித்து கொண்டு இருந்தபோது அவர்களின் கால்களில் சாக்குமூட்டை ஒன்று தட்டுப்பட்டது.
அந்த சாக்குமூட்டைகளை கரைக்கு கொண்டு வந்த அவர்கள், பிரித்துப் பார்த்தனர். அதில் சாமி சிலைகள் இருந்ததால் ஆச்சரியமடைந்தனர்.

ஒரு அடி, 2 அடி உயரமுள்ள தேவி சிலை ஒன்றும், நாகர் சிலை 2, சாஸ்தா மற்றும் விநாயகர் சிலைகள் ஒன்றும் இருந்தது. இதனையடுத்து அந்த நபர்கள் போலீசில் தெரிவித்தனர்.
திருவட்டார் போலீசார் அங்கு சென்று சிலைகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து அந்த சாமி சிலைகளை காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்
அந்த சிலைகள் எந்த கோவிலைச் சேர்ந்தவை, அவற்றை யார் இங்கு கொண்டு வந்து போட்டனர் என்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications