இரண்டு அண்ணன்களின் உதவியால் இரட்டை இலை மீண்டது - கோகுல இந்திரா
இரண்டு அண்ணன்களின் உதவியால்தான் இரட்டை இலை மீண்டது என்று கோகுல இந்திரா கூறியுள்ளார்.
Recommended Video

அதிமுகவின் கட்சி, கொடி, சின்னம் மீட்கப்பட்டதற்கு ஜெயலலிதாவின் ஆசி பெற்ற ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய அண்ணன்கள்தான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா கூறியுள்ளார்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மிகப்பெரிய சட்டப்போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

அதிமுக என்ற கட்சியின் பெயர், கொடி, சின்னம், ஆகியவற்றை முதல்வர் அணி பயன்படுத்தலாம். அமைப்பு ரீதியாகவும், சட்டரீதியாகவும் அதிமுக அணிக்கே பெரும்பான்மை உள்ளதால் மதுசூதனன் அணி இவற்றை பயன்படுத்த அனுமதிக்கலாம் என தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
நீதிபதி சாதிக் அலி தீர்ப்பின் அடிப்படையில் இந்த உத்தரவை தேர்தல் ஆணையம் அளித்துள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்கள் இருப்பதால் பொது வாக்கெடுப்பு நடத்த முடியாது என்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் அடிப்படையிலேயே
முடக்கப்பட்ட இரட்டைஇலை சின்னம் மீண்டும் விடுவிக்கப்பட்டுள்ளதால் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர். அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கோகுல இந்திரா, இந்த வெற்றிக்கு இரண்டு அண்ணன்களும்தான் காரணம் என்றார்.
ஜெயலலிதாவின் ஆசி பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் தலைமையிலான முயற்சிதான் இந்த வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் என்று கூறினார்.
ஒவ்வொரு அதிமுகவினரின் கனவும், கட்சி, சின்னத்தை மீட்க வேண்டும் என்பதே. அந்த கனவு நிறைவேறியுள்ளது என்றும் கோகுல இந்திரா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications