நெல்லை அருகே ரூ.1.56 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்
நெல்லை: திருநெல்வேலி அருகே இன்று வாகனச் சோதனையில் ரூ. 1.56 கோடி மதிப்பிலான தங்கம், வெள்ளி நகைகளை தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு பணியில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஒரு சட்டசபை தொகுதிக்கு 3 பறக்கும் படை, 3 நிலை கண்காணிப்புக்குழு வீதம் அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை சட்டசபை தொகுதியில் மேலப்பாளையம் கருங்குளம் சோதனைச் சாவடியில் நேற்று நிலைக் கண்காணிப்புக்குழு அதிகாரி து.கருப்பசாமி தலைமையில் குழுவினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பொலிரோ காரில் திருநெல்வேலியில் இருந்து அம்பாசமுத்திரத்தில் உள்ள ஜூவல்லரி கடைக்கு 2 கிலோ தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி கொலுசுகள் உள்ளிட்ட நகைகள் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 1.56 கோடி ஆகும்.
உடனடியாக தங்கம், வெள்ளி நகைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அதற்கு உரிய ஆவணங்கள் உள்ளனவா ? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். கொண்டு சென்ற நகைகளுக்கு உரிய ஆவணங்களை ஜூவல்லரி உரிமையாளர் சமர்ப்பித்தனர். இது குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திய பின்னர் ஒப்படைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications