தன்னெழுச்சி போராட்டத்தை சுயநலத்துக்காக வளைக்க நடந்த சதியை முறியடித்த இளைஞர் படை!
மாணவர், இளைஞர் தன்னெழுச்சி போராட்டத்தை ஒரு கும்பல் தங்களது சுயநலத்துக்காக வளைக்கவும் சதி செய்திருக்கிறது. ஆனால் அதை மாணவர்கள், இளைஞர்கள் முறியடித்துள்ளனர்.
சென்னை: தமிழகத்தின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு உரிமை மீட்பு புரட்சியை தங்களது அரசியல் சுயலாபத்துக்காக பயன்படுத்த நடந்த சதியை இளைஞர் படை முறியடித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் 'செயல்படுகிற' அரசாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அரசு இருந்து வருகிறது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீது மக்களும் அதிமுக தொண்டர்களும் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.
இதனால்தான் முதல்வர் பதவியை கபளீகரம் செய்ய துடிக்கும் கும்பலால் முன்னேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முடிந்த அளவு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீது அதிருப்தியை உருவாக்க எல்லா வழிகளையும் கையிலெடுத்து வருகிறது அக்கும்பல்.

போலீஸ் மூலம்...
சென்னையில் தலைமைச் செயலகத்துக்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செல்லும்போது போலீசார் வேண்டுமென்றே வாகனங்களை நிறுத்தி வைப்பது; சென்னையில் வரலாறு காணாத வன்முறையை போலீஸ் மூலம் கட்டவிழ்த்துவிட்டது என்பதெல்லாமே அந்த கும்பலின் சதிதான் எனக் கூறப்படுகிறது.

நம்பிக்கை வைக்காத மாணவர்கள்
தற்போது இக்கும்பலைச் சேர்ந்த தலையெடுக்க துடிக்கும் அடுத்த தலைமுறையினர், மாணவர்கள் போராட்டத்தை வளைக்க எவ்வளவோ முயற்சி செய்தோம்.. பணத்தைக் காட்டியும் பார்த்தோம். ஆனால் இந்த பெருங்கூட்டம் நம்ம மீது நம்பிக்கை வைக்கவில்லையே என உச்சுகொட்டி புலம்பி வருகிறதாம்.

ஓபிஎஸ்க்கு எதிராக திருப்ப...
மாணவர்கள் புரட்சியை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான போராட்டமாக மடை மாற்றிவிட இந்த கும்பல் துடியாய் துடித்து காத்திருந்தது. ஆனால் இந்த கும்பலின் ஊடுருவலை மாணவர்கள், இளைஞர்கள் பெரும்படை நன்றாகவே புரிந்து கொண்டு ஒருவரையும் உள்ளேவிடாமல் அவர்களது சதியை முறியடித்து வெற்றி கண்டுவிட்டனர்.

போலீஸ் தாக்குதலுக்கு காரணம்
இந்த வெற்றியால் கடும் ஆத்திரம் கொண்ட அந்த கும்பல்தான் போலீஸை ஏவி விட்டு மாணவர்கள், அவர்களுக்கு ஆதரவாக இருந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவும் காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications