செய்யாறு அருகே அரசுப் பேருந்து மோதி கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே பலி
செய்யாறு அருகே அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மோதி விபத்து கணவன் மனைவி பலி
திருவண்ணாமலை: செய்யாறு அருகே இரு சக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, வடுகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (35), அவரது மனைவி நதியா (30) இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இருவரும் தங்கள் குழந்தைகளுக்கு காதணி விழா நடத்துவதற்கு பத்திரிகை அச்சடிப்பதற்காக இன்று ஞாயிற்றுக்கிழமை செய்யாறுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். பின்னர், செய்யாறில் இருந்து தங்களுடைய் இருசக்கர வாகனத்தில் மீண்டும் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது செய்யாறு - ஆரணி சாலையில் தண்டரை கிராமம் அருகே, செய்யாறு நோக்கி சென்ற அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயெ பரிதாபமாக உயிரிழந்தார்கள். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
குழந்தைகளின் காதணி விழாவுக்கு பத்திரிகை அச்சடிக்க சென்ற கணவன் மனைவி பேருந்து மோதி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications