டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய அரசு பஸ்.. பொதுமக்கள் ஓட்டம்
நெல்லை: நெல்லையில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசு பேருந்து கடையம் அருகே திடீரென டயர் வெடித்து தாறுமாறாக ஓடியதால் பொதுமக்கள் பதறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
நெல்லை புளியரையில் இருந்து நாகர்கோவிலுக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பேருந்தை சாமுவேல் சத்தியராஜ் ஓட்ட, கண்டரக்டராக பாலசுப்பிரமணியன் இருந்தார். அந்தப் பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இவர்களில் கல்லூரி மாணவ, மாணவிகளும் அடக்கம்.

இந்தப் பேருந்தானது கடையம் பேருந்து நிலையம் அருகே வடக்கு பஜாரில் வந்த போது திடீரென முன்பக்க வலபுறத்தில் உள்ள டயர் வெடித்தது. இதனால் பேருந்து கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர்.
பயணிகளின் அலறல் சத்தத்தைக் கேட்டு சாலையில் சென்று கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், பேருந்து ஒன்று தாறுமாறாக வருவதைப் பார்த்து அவர்கள் ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் டிரைவர் கடுமையாக போராடி பேருந்தை நிறுத்தினார். டயர் வெடித்த பகுதி போக்குவரத்து மிகுந்த பகுதி என்பதால் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் திணறின. பின்னர் பேருந்தில் இருந்த பயணிகள் மாற்று பேருந்தில் ஏற்றி விடப்பட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் இந்த வழித்தடத்தில் தான் புதிய பேருந்தை இயங்கி வைத்தார். அது சுமார் 1 வார காலம் மட்டுமே ஓடியது. பின்னர் அதை வேறு வழித்தடத்தில் மாற்றி விட்டுவிட்டு, இந்த வழித்தடத்தில் பழைய பேருந்தை இயக்கியுள்ளது இந்த சம்பவத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications