கிருஷ்ணகிரியில் ஜிகா வைரஸ்... வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தும் சுகாதாரக் குழு: வீடியோ
கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்ராம்பாளையம் ஊராட்சியில் ஜிகா வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து சுகாதாரக் குழுவினர் அங்கு வீடு வீடாக சென்று பரிசோதனை செய்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நாட்ராம்பாளையம் ஊராட்சியில் உள்ள கிராமங்களில் ஜிகா வைரஸ் பரவலைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் சுகாதாரக் குழு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பெயர் தெரியாத மர்மக் காய்ச்சல் மக்களை அச்சுறுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக டெங்கு, ஜிகா வைரஸ் காய்ச்சல் குறித்த அச்சம் மக்களிடம் உள்ளது. கடந்த ஆண்டு திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவடங்களில் டெங்குக் காய்ச்சலுக்கு பலர் பலியாகினர். அதில் பெரும்பாலானோர் பள்ளி சிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாட்ராம்பாளையம் ஊராட்சியில் உள்ள பல கிராமங்களில் ஜிகா வைரஸ் பரவி வருகிறது. அதில் ஒருவருக்கு ஜிகா வைரஸ் தாக்குதல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதையடுத்து 6 மருத்துவர்கள், 12 மருத்துவ உதவியாளர்கள், செவிலியர்கள் அடங்கிய மருத்துவ சிறப்புக் குழு நாட்ராம்பாளையம் ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று மருத்துவ பரிசோதனை செய்து வருகிறது. அதனை மாவட்ட ஆட்சியர், கதிரவன் நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்.
மேலும், சுகாதாரத்துறை ஊழியர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று கொசு மருந்து அடித்து வருகின்றனர். மேலும் கொசு உற்பத்தியாகாமல் இருக்க வழிமுறைகளையும் சொல்லி வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications