For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மோடிக்கு பூ கொடுத்த ஓபிஎஸ், பொன்னாடையும் போர்த்திய எடப்பாடி

மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர், துணை முதல்வர் வரவேற்றனர்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

Recommended Video

    மானிய ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி- வீடியோ

    சென்னை: அதிமுகவின் தேர்தல் அறிவிப்பான மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

    அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பணிக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.

    Governor, CM, deputy CM welcomes PM at Chennai airport

    சென்னை விமான நிலையத்தில் பிரதமர்நரேந்திர மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிவப்பு நிற சால்வை அணவித்து புத்தகத்தையும், இரண்டு ரோஜா பூங்கொத்துகளையும் கொடுத்து கைகுலுக்கி வரவேற்றார்.

    அடுத்தபடியாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒரு அன்பளிப்பை பரிசளித்து இரண்டு பூங்கொத்துகளை கொடுத்து புன்னகைத்தவாரே கைகுலுக்கினார். இவர்களையடுத்து மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் இரட்டை ரோஜாக்களுடன் அன்பளிப்பாக புத்தகத்தையும் அளித்தனர். இதே போன்று எம்பி மைத்ரேயன், நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பிரதமரை விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    English summary
    TN governor Banwarilal Purohit, CM Palanisamy, Deputy CM O.Paneerselvam welcomes PM Modi at Chennai airport with shawls and two roses
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X