7 தமிழர் விடுதலை.. ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - கவுதமன்
7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுதமன் கூறியுள்ளார்.
Recommended Video

கும்பகோணம்: ராஜீவ் கொலை சம்பவத்தில் தொடர்புடைய 7 பேர் விடுதலையில் தமிழக ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குனர் கவுதமன் தெரிவித்துள்ளார்.
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி க்கு எதிராக நடைபெற்ற 365-வது நாள் போராட்டத்தில் திரைப்பட இயக்குனர் கவுதமன் கலந்து கொண்டார். அப்போது கவுதமன் உள்ளிட்ட பலர் மீது பந்தநல்லூர் போலீசார் கடந்த மே மாதம் 19-ம் தேதி வழக்கு தொடர்ந்தனர்.

நீதிமன்றத்தில் சரண்
இவ்வழக்கு தொடர்பாக இன்று கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் கவுதமன் சரணடைந்தார். பின்னர் நீதிமன்றத்தில் இருந்து எப்போது சம்மன் வருகிறதோ அப்போது மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நிபந்தனையுடன் கவுதமன் உடனடியாக விடுவிக்கப்பட்டார். நீதிமன்றத்தை விட்டு வெளியேறியதும் செய்தியாளர்களை சந்தித்து கவுதமன் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

அனுமதி கிடையாது
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்த நிறுவனத்திற்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெட்ரோல், மற்றும் மீத்தேன் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கதிராமங்லம் உள்ளிட்ட தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் மீத்தேன் உள்ளிட்ட எந்த பெட்ரோலிய பொருட்களை எடுக்க எந்த மக்களும் அனுமதிக்க மாட்டார்கள்.

கைது செய்ய வேண்டும்
நாங்கள் சட்டத்தை மதித்து நடக்கிறோம். நீதிமன்றத்தில் ஆஜராகினோம். ஆனால் எச். ராஜா. எஸ்.வி. சேகர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் காவல்துறையினரின் உதவியோடு உலா வருகின்றனர். இவர்கள் கைது செய்யப்பட வேண்டும். கருணாசுக்கு ஒரு நீதி, எஸ்.வி. சேகர், மற்றும் எச்.ராஜாவுக்கு ஒரு நீதியா?

7 பே ரவிடுதலை
எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் உடனடியாக கைது செய்ய வேண்டும். எச்.ராஜா மற்றும் கருணாஸ் விவகாரத்தால் ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை மறக்கடிக்கப்பட்டுள்ளது . தமிழக ஆளுநர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு இயக்குனர் கவுதமன் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications