சென்னையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வந்துள்ளார்.
சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வருகை தந்துள்ளார். இதையொட்டி தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்வும் சென்னை வந்துள்ளார்.
சென்னை தாம்பரம் விமானப்படை விழா, அடையாறில் இந்திய பெண்கள் விழா ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று இரவு 8.30 தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் குடியரசுத் தலைவரை தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அதன் பின்னர் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அங்கு இரவு தங்குகிறார்.
இன்று காலை ஆளுநர் மாளிகையில் இருந்து காரில் தாம்பரம் விமான படை தளத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார். பின்னர் அடையாறில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறார். அங்கிருந்து பழைய விமான நிலையம் சென்று மதியம் 1.15 மணிக்கு தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.












Click it and Unblock the Notifications