சொத்துக் குவிப்பு தீர்ப்பு வரும் வரை சசிகலாவை கூப்பிட மாட்டார் ஆளுநர்
சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் வரை அவரை தமிழக பொறுப்பு ஆளுநர் சந்திக்க மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு வரும் வரை சசிகலாவுக்கு நேரம் ஒதுக்குவதில்லை என்று தமிழக பொறுப்பு ஆளுநர் உறுதியுடன் இருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன. சசிகலா என்னதான் மிரட்டினாலும் அதற்கு ஆளுநர் மாளிகை அடி பணியாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆளுநர் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதை மட்டுமே விரும்புவதாகவும், அதற்கு சொத்துக் குவிப்பு தீர்ப்பு வழக்கின் தீர்ப்பு வரும் காத்திருப்பது அவசியம் என்று அவர் கருதுவதாகவும், இதனால்தான் தனது முடிவை நிறுத்தி வைத்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தீர்ப்பு வந்த அடுத்த நிமிடமே ஆளுநர் தனது முடிவை அறிவிப்பார் என்றும் ஆளுநர் மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக உரிய சட்ட ஆலோசனைகளை ஆளுநர் பெற்று விட்டதாகவும் ஆளுநர் மாளிகை தரப்பு தகவல்கள் தெரிவிகக்கின்றன.
மற்றபடி சசிகலா சொல்வது போல அதிமுகவை உடைக்க ஆளுநர் முயற்சிக்கவில்லை. ஆளுநரின் தாமதத்திற்கு இதுதான் காரணம். வேறு எதுவும் இல்லை. தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பது மட்டுமே ஆளுநரின் கருத்தாகும்.
சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு முக்கியமானது. அதில் சசிகலா விடுதலையாகி விட்டால் பிரச்சினை இல்லை. ஆனால் தண்டிக்கப்பட்டு விட்டால் அவர் பதவியிழக்க நேரிடும். எனவே அடுத்தடுத்து பதவிப்பிரமாண நிகழ்ச்சிகளை நடத்த ஆளுநர் விரும்பவில்லை. இது தமிழகத்தில் தேவையில்லாத குழப்பங்களையும் ஏற்படுத்தும் என்பதால்தான் தீர்ப்பு வரும் வரை காத்திருக்க அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
எனவே இப்போதைக்கு சசிகலாவுக்கு நேரம் ஒதுக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தீர்ப்பு வரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும் என்றும் ஆளுநர் மாளிகை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications