இரண்டு பாட்டிகளைப் போட்டுத் தள்ளிய பேரன் – வெறும் நான்கு பவுன் நகைக்காக!
கோயம்புத்தூர்: கோவையில் நான்கு பவுன் மதிப்புள்ள தங்க நகைகளுக்காக இரண்டு பாட்டிகளை கொலை செய்த பேரன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை நகரிலுள்ள சவுரிபாளையம், இராஜிவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் எஸ்தர் கணவரை இழந்தவர்.
இவரது உறவினர் அய்யம்மாள். இவரும் கணவரை இழந்தவர்.
ஒரே வீட்டில் பாட்டிகள்:
இருவரும் நெருங்கிய உறவினர் என்பதால், ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
மர்மமாக இறப்பு:
இதில், அய்யம்மாள் மட்டும் அந்தப்பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு படுக்கச் சென்றஇருவரும், வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
வீட்டிற்குள்ளேயே கொலை:
வீட்டின் அருகே இருந்த கழிவறைக்குள் எஸ்தர் உட்கார்ந்த நிலையில் பிணமாக கிடந்தார். வீட்டின் உள் இருந்த கட்டிலுக்கு அடியில் அய்யம்மாள் சடலமாக கிடந்தார்.
போலீசார் விசாரணை:
தகவலறிந்த மாநகர சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் துணைக்கமிஷனர் பிரவேஷ்குமார், குற்றப்பிரிவு துணைக்கமிஷனர் ரம்யா பாரதி, உதவிக்கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.
4 பவுன் நகைகள் மாயம்:
அய்யம்மாள் கழுத்திலிருந்த நகை, கம்மல் உள்ளிட்ட 4 பவுன் நகைகள் மாயமாகியிருந்தது.
உறவினர்களுக்கு தகவல்:
மூதாட்டிகள் இருவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தபோது, அங்கு வந்த அய்யம்மாளின் பேரன் ரமேஷ் தான் இரண்டு பேரும் இறந்து கிடப்பதாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
ரமேஷிடம் விசாரணை:
வெளியாட்கள் யாரும் அந்த வீட்டிற்கு வந்த போனதற்கான தடயங்களோ இல்லாத நிலையில், சந்தேகம் கொண்ட போலீசார் ரமேஷிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஒப்புக் கொண்ட பேரன்:
பாட்டியிடம் எப்போதுமே கொஞ்சம் பணம் இருக்கும் தவிர இருவரிடமும், நகையும் உள்ளது, மேலும், பாட்டி அய்யம்மாள் இறந்து போனால் அவரது சொத்து தனக்குத்தான் வரும் என்ற ஆசையில் பாட்டி அய்யம்மாளையும், லட்சுமியையும் கொலை செய்ததை நேற்று இரவு அவர் ஒப்புக்கொண்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications