பெருந்துறை சிப்காட்: பூமியில் புதைக்கப்பட்ட திடக்கழிவுகள்.. 10 கிமீ சுற்றளவு நிலத்தடி நீர் பாதிப்பு
பெருந்துறை ஆலை கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு: பெருந்துறையில் இயங்கி வரும் சிப்காட் ஆலையினால், பல ஆயிரம் டன் ரசாயன கழிவுகள் மண்ணில் புதைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. அத்துடன், ஆலையின் கழிவுகளால் 10 கிமீ சுற்றளவிற்கு நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 2700 ஏக்கர் பரப்பில் ஆசிய அளவில் மிகப்பெரிய தொழிற்பேட்டையான சிப்காட் அமைந்துள்ளது. இதில் 250 க்கும் அதிகமான ஆலைகள் இயங்கி வருகின்றன.

மறுசவ்வூடுமுறை
இதில் சாய, தோல் ஆலைகளும் அடக்கம். உயர்நீதி மன்ற உத்தரவின் படி ஒரு சொட்டு தண்ணீரை கூட இவர்கள் வெளியேற்ற கூடாது. மறு சவ்வூடு முறையில் சுத்திகரித்து பயன்படுத்த வேண்டும் என்பது விதி். ஆனால் இங்குள்ள ஆலைகள் விதிகளை காற்றில் பறக்கவிட்டு கழிவுகளை நேரடியாக வெளியேற்றுகின்றன என்பது புகார்.

நிலத்தடி நீர் பாதிப்பு
ஆலைகளில் தேங்கிய பல ஆயிரம் டன் ரசாயன நச்சு திட கழிவுகள் குளம், கிணறு மற்றும் ஆங்காங்கே மண்ணில் புதைக்கப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இந்த கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு சுற்று வட்டாரங்களில் 10 கிமீ சுற்றளவில் உள்ள வெட்டுக்காட்டு வலசு, எழுதிங்கள்பட்டி, குட்டப்பாளையம், செங்குளம், கூத்தம்பாளையம், ஓடைக்காட்டூர், பெரிய வேட்டுவபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.

வாழ்வாதாரம் பாதிப்பு
இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டதுடன், இவற்றை பயன்படுத்த முடியாமல் குடிநீருக்கும், கால் நடைகளுக்கும் விலை கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்துகின்றனர். நிலம், நீர், காற்றும் மாசடைந்துள்ளதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கிராமங்களை காலி செய்யும் நிலையும், பல நோய் தாக்குதல்களுக்கு ஆளாகி இருப்பதாகவும் கிராமத்தினர் தெரிவித்தனர்.

இழப்பீடு வழங்க கோரிக்கை
வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க 26 ம் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். சிப்காட் வளாகத்தில் தேங்கி கிடக்கும் திட கழிவுகளை அகற்றி, நீராதாரத்தை பாதுகாக்கவும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் பாதிப்புகளுக்கான இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி உள்ளனர்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications