தர்மபுரி அருகே இரு தரப்பினர் மோதல்: கடை, வீடுகள் சூறை!- 35 பேர் கைது
தர்மபுரி: தர்மபுரி அருகே இருதரபினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வீடுகள், கடைகள் சூறையாடைப்பட்டன. இதனால், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை ஒரு சமூகத்தைச் சேர்ந்த 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தர்மபுரி அருகே சாமிசெட்டிப்பட்டியில் கோவில் அருகே உள்ள நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் இருதரப்பிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் தகராறு முற்றி மோதலாக மாறியது.

இந்த மோதலில் ஒரு தரப்பினரின் கடை மற்றும் வீடுகள் மற்றொரு தரப்பினர் அடித்து சூறையாடியதால் அங்கு மேலும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதனையடுத்து சாமிசெட்டிப்பட்டி கிராமத்தில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஒரு சமுதாயத்தை சேர்ந்த 35 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இருதரப்பையும் சேர்ந்த 15 பேரிடம் தர்மபுரி மாவட்ட எஸ்.பி. நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications