காவல்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
நெல்லை அருகே காவல் துறை சார்பில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லை: நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காவல் துறையினரும் உங்கள் நண்பன் தான் என்பதை பறைசாற்றும் வண்ணம் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ள விக்ரமன் வாசுதேவன், மற்றும் தென்காசி உதவி கண்காணிப்பாளராக பணியாற்றிய அரவிந்தன் ஆகியோர் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இவர்கள் பள்ளி மாணவ, மாணவிகளிடம் தன்னம்ம்பிக்கையை வளர்க்கும் வண்ணமும் அவர்களது கல்வித்தரத்தை உயர்த்தும் வண்ணமும் பாதுகாப்புக்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்ப்பாடுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கல்லிடை குறிச்சி காவல் நிலையத்தின் சார்பாக பொது தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விக்ரமன், கோவையை சேர்ந்த முனைவர் ஜெயந்தி ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசியவர்கள், காவல் துறையை விரும்பி தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் சில அதிகாரிகளை முன்மாதிரியாக கொண்டு செயல்பட வேண்டும் எனக் கூறினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications