Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குட்கா முறைகேடு: கைதான 5 பேரையும் 5 நாள் காவலில் எடுக்க சிபிஐக்கு அனுமதி

குட்கா ஊழலில் கைதான மாதவ ராவ் 5 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: குட்கா ஊழலில் கைதான மாதவ ராவ் 5 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

குட்கா ஊழல் தமிழக அரசை மொத்தமாக ஆட்டிப்படைக்கிறது. இதனால் மொத்தம் 35 இடங்களில் சோதனை நடந்தது.அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, உள்ளிட்ட புள்ளிகளின் வீடுகளில் சோதனை நடந்தது.

Gutka Scam: CBI gets custody of all 5 persons, including, Madhav Rao

இந்த குட்கா ஊழலில் உண்மைகள் வெளியே வர காரணமாக இருந்தது, மாதவ ராவ்தான். இவர் வீட்டிலும் சோதனை. அவர் வீட்டில் இருந்து ஒரு டைரியும், சில ஆவணங்களும் கிடைத்தது. அதை வைத்துதான் நேற்று முதல் நாள் 35 இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு நடத்தியது.

எம்டிஎம் என்ற குட்கா நிறுவனத்தின் பிரதான உரிமையாளர்தான் மாதவ ராவ். இவர் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இவர்கள் இன்று சென்னை சிபிஐ நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவர்களை விசாரணை காவலில் எடுக்க சிபிஐ தாக்கல் செய்த மனுவில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கைதான 5 பேரையும் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மாதவராவ் உட்பட 5 பேரையும் செப்.14ஆம் தேதி காலை மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+