குட்கா மோசடி வழக்கு: தமிழக டிஜிபி ராஜேந்திரன் பதவிக்கு நெருக்கடி? தலைமை செயலருடன் திடீர் சந்திப்பு
குட்கா புகாரில் தொடர்புள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரை பதவி விலக வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வற்புறுத்தியுள்ளனர்.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் நடந்த குட்கா முறைகேடு வழக்கு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வந்தது. பல தரப்பையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டிய வழக்கு இது என்பதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி, திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சார்பில் ஹைகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
தடை செய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா தமிழகம் முழுவதும் தடையின்றி விற்கப்படுகிறது, சட்டவிரோத குட்கா விற்பனைக்காக அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றனர் என்பதும் புகார்.

குட்கா வழக்கில், சிபிஐ விசாரணைக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டு இன்று தீர்ப்பு வெளியிட்டுள்ளது. இதையடுத்து புகாரில் தொடர்புள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் ஆகியோரை பதவி விலக வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வற்புறுத்தியுள்ளனர்.
பொது வாழ்வில் இருப்பவர்கள் மீது பொய் புகார் வருவது சகஜம் என்று விஜயபாஸ்கர் பதில் அளித்துள்ளார். எனவே, டிஜிபி ராஜேந்திரனை பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ராஜேந்திரன் இன்று அவசரமாக தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும், ராஜேந்திரன் சந்தித்து ஆலோசித்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிகழ்வுகள் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications