காவிரி விவகாரத்தில் அவகாசம் கேட்டதற்கு கலவர முயற்சியா?: போராட்டத்தை கொச்சைப்படுத்தும் எச். ராஜா
காவிரி விவகாரத்தில் அவகாசம் கேட்டதற்கு கலவரத்தை தூண்ட முயற்சிப்பதா என்று எச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை: காவிரி விவகாரத்தில் அவகாசம் கேட்டதற்கு கலவரத்தை தூண்ட முயற்சிப்பதா என்று பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகத்தில் போராட்டம் வலுத்துள்ளது. இந்நிலையில் திமுக தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறது.

அதிமுக இன்று உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறது. மேலும் இன்று மருந்து கடைகள், ஹோட்டல்கள் என கடையடைப்பு நடத்தியுள்ளன. நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் பந்த் நடத்தப்படுகிறது.
காவிரிக்காக மக்கள் போராடி வரும் நிலையில் காவிரி நீரை பெற்று தருவோம் என்று தமிழிசையும், எச் ராஜாவும் வீரவசனம் பேசி வருகின்றனர்.
மதுரையில் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பிரதமர் மோடி வானில் சென்றாலும் கீழே இருந்து மறிப்போம், கருப்புக் கொடி காட்டி மறிப்போம் என்கிறார்கள்.
காவிரி விவகாரத்தில் அவகாசம் கேட்டதற்காக கலவரத்தை தூண்ட முயற்சிப்பதா. காவிரி விவகாரத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்ட நாளில் இருந்துதான் 90 நாட்கள் மத்திய அரசு காலஅவகாசம் கேட்டது.
பாஜகவுக்கு தமிழகமும், கர்நாடகமும் ஒன்றுதான். எனவே கர்நாடக தேர்தலுடன் காவிரியை தொடர்புபடுத்த வேண்டாம் என்றார் எச் ராஜா.












Click it and Unblock the Notifications