வைகோ யாத்திரையில் பாஜகவினர் மீது தாக்குதல்: எச். ராஜா கடும் கண்டனம்
உடன்குடியில் பாஜகவினர் மீதான தாக்குதலைக் கண்டித்துள்ளார் எச். ராஜா.
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பிரசார யாத்திரையில் பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதற்கு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தம்முடைய ட்விட்டர் பக்கத்தில் எச்.ராஜா பதிவிட்டுள்ளதாவது:
பிரதமருக்கு எதிராக திமுக மதிமுக வினர் கருப்புக்கொடி காட்டிய போது பாஜக வன்முறையில் இறங்கவில்லை. ஆனால் உடன்குடியில் வைகோ விற்கு கருப்புக்கொடி காட்டிய பாஜக வினர் மீது வன்முறை தாக்குதல் நடத்திய மதிமுக வின் வன்முறை செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இவ்வாறு எச். ராஜா பதிவிட்டுள்ளார். இதேபோல தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட அறிக்கையிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமருக்கு எதிராக திமுக மதிமுக வினர் கருப்புக்கொடி காட்டிய போது பாஜக வன்முறையில் இறங்கவில்லை. ஆனால் உடன்குடியில் வைகோ விற்கு கருப்புக்கொடி காட்டிய பாஜக வினர் மீது வன்முறை தாக்குதல் நடத்திய மதிமுக வின் வன்முறை செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன்
— H Raja (@HRajaBJP) April 22, 2018
அத்துடன் வன்முறையை தூண்டும் வைகோவின் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications