மீனவர் பிரிட்ஜோவை புலிகளின் கை கூலிகள் ஏன் கொலை செய்திருக்க கூடாது? இப்படி கேட்பது ஹெச். ராஜா
தமிழக மீனவர் பிரிட்ஜோவை விடுதலைப் புலிகளின் கை கூலிகள் ஏன் கொலை செய்திருக்கக் கூடாது என கேவலமாக பேசியுள்ளார் ஹெச். ராஜா
Subscribe to Oneindia Tamil
பட்டுக்கோட்டை: ராமேஸ்வரம் மீனவர் பிரிட்ஜோவை தமிழீழ விடுதலைப் புலிகளின் கை கூலிகளும் அவரது ஆதரவாளர்களும் ஏன் கொலை செய்திருக்கக் கூடாது என அறிவிலித்தனமாக கேள்வி கேட்டிருக்கிறார் பாஜகவின் ஹெச். ராஜா.
பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் ஹெச். ராஜா கூறுகையில், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 600 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆனால் பிரதமர் மோடியின் ஆட்சியின் பெருமளவு குறைந்துவிட்டது.

பிரிட்ஜோவை விடுதலைப் புலிகளின் கைக்கூலிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் ஏன் கொலை செய்திருக்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் செய்தியாளர்களை இழிவான சொற்களால் விமர்சித்த ஹெச். ராஜா, இளம் மீனவர் பிரிட்ஜோவின் கொலையை வைத்தும் அரசியல் செய்வது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதுதான் தமிழக மக்களின் கருத்து.












Click it and Unblock the Notifications