ஐஐடி மாணவர்களுக்கு கருணாநிதி, வைகோ,வீரமணி வக்காலத்து வாங்குவது ஏன்? கேட்கிறார் ஹெச். ராஜா
காரைக்கால்: ஐ.ஐ.டி. கல்வி நிறுவன வளாகத்தில் மதக்கலவரங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்தில் கல்லூரி நிர்வாகம் அம்பேத்கார் - பெரியார் வாசகர் வட்டத்திற்கு தடை விதித்துள்ளது என்று கூறியுள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, இந்த விவகாரத்தில் கருணாநிதி, வைகோ,கி.வீரமணி எதிர்ப்பு தெரிவிப்பது கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார்.
காரைக்காலில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, மோடி தலைமையிலான ஒரு வருட ஆட்சியில் பல மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பா.ஜ.க.வுக்கு எதிராக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் கூறும் அவதூறான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் வகையில், நாடு முழுவதும் 5 ஆயிரம் பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஐ.ஐ.டி. கல்வி நிறுவன வளாகத்தினுள் இந்து மதம் அழிக்கப்பட வேண்டும் என்று துண்டு பிரசுரம் வெளியிட்ட தீபக் ஜான்சன் என்ற மாணவர் தலைமையில் இயங்கும் அமைப்பைதான், கல்வி நிறுவன வளாகத்தில் மதக்கலவரங்கள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கத்தில், கல்லூரி நிர்வாகம் அந்த அமைப்பு கல்லூரி வளாகத்தில் செயல்படக்கூடாது என்று தடை விதித்துள்ளதாக அவர் கூறினார்.
இந்த தடையை ஏதோ பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது போன்று கருணாநிதி, வைகோ மற்றும் வீரமணி ஆகியோர் எதிர்ப்பு தெரிவிப்பது கேலிக்குரியது. அம்பேத்கார் தேசியவாதி, நாட்டு சுதந்திரத்திற்காக பாடுபட்டவர். ஆனால், பெரியார் சுதந்திர தினத்தை கருப்பு தினம் என்று தங்களது நாளேட்டில் தலைப்பு செய்தியாக வெளியிட்டவர். இருவரது பெயரையும் இணைத்து அமைப்பு நடத்துவது என்பதே ஏமாற்று வேலை என்று கூறினார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி எப்படி இது போன்ற செயலுக்கு வக்காலத்து வாங்குகிறார் என்று தெரியவில்லை. இந்த விவகாரத்தில் கருணாநிதி, வைகோ,கி.வீரமணி எதிர்ப்பு தெரிவிப்பது கண்டனத்திற்குரியது என்றும் ராஜா தெரிவித்தார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications