For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாட்டையை சுழட்டினால்தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாகுமாம்.. எச் ராஜா கூறும் உதாரணத்தை பாருங்க

சாட்டையை சுழற்றினால்தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாகும் என்று எச் ராஜா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    3-ஆவது நீதிபதியாக நியமிக்கப்பட்ட விமலா | ஹெச்.ராஜா சர்ச்சை டிவீட்- வீடியோ

    சென்னை: சாட்டையை சுழற்றினால்தான் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாகும் என்று எச் ராஜா டுவிட்டரில் கருத்து கூறியுள்ளார்.

    சம்பந்தமில்லாமல் பேசுவது , அநியாயத்துக்கு பேசுவது இப்படி பேசி பேசியே எச் ராஜா நெட்டிசன்களிடம் வகையாக சிக்குவார். அனைவரும் பாரபட்சம் இல்லாமல் திட்டுவர். அதுபோல் மெர்சல் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததன் மூலம் நெட்டிசன்களிடம் வாங்கிக் 5 கட்டினார்.

    நாட்டையே உலுக்கிய காஷ்மீர் கத்துவா சம்பவத்தில் கூட ஒரு சிறுமியை கோயிலுக்கு எப்படி அடைத்து வைக்க முடியும் என்று குதர்க்கமாக கேட்டிருந்தார். அந்த சிறுமிக்கு போதை ஊசி செலுத்தப்பட்டது என்பதை தெரிந்தும் எச் ராஜாவுக்கு இதை கேட்க எப்படி மனம் வந்தது என நெட்டிசன்கள் திட்டி தீர்த்தனர்.

    கருப்புக் கொடி

    கருப்புக் கொடி

    இந்நிலையில் ஆளுநர் தனது அதிகாரத்தை மீறி மாவட்டங்களில் ஆய்வு செய்வது மாநில அரசுகளின் நிர்வாகத்தில் தலையிடுவது போன்றது என குற்றம்சாட்டப்பட்டது. இதை கண்டித்து எதிர்க்கட்சிகள் கருப்பு கொடி காட்டுவது வழக்கம்.

    7 ஆண்டுகள்

    7 ஆண்டுகள்

    இதை தமிழிசை சௌந்தரராஜனும் எச் ராஜாவும் கண்டனம் தெரிவித்தனர். கருப்பு கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்கக் கூடாது என்பர். இந்நிலையில் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டினால் ஐபிசி பிரிவு 124 ன் படி 7 ஆண்டுகள் தண்டனை கிடைக்கும் என்பதை காவல்துறை சுட்டிக் காட்டியுள்ளார்.

    நல்ல உதாரணம்

    நல்ல உதாரணம்

    இதனால் கருப்புக்கொடி காட்டுவது முடிவிற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை வைத்து கொண்டு எச் ராஜா கருத்து கூறியுள்ளார். அவர் டுவிட்டரில் கூறுகையில் சாட்டையை சுழட்டினால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாகும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம்.

    டுவிட்டரில் அறிவுரை

    டுவிட்டரில் அறிவுரை

    ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டினால் IPC பிரிவு 124 ன் படி 7 ஆண்டுகள் தண்டனை கிடைக்கும் என்பதை காவல்துறை சுட்டிக் காட்டியபின் கருப்புக்கொடி காட்டுவது முடிவிற்கு வந்துள்ளது என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    BJP National Secretary H.Raja says that those who shows black flags against Governor gets 7 years imprisonment.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X