எத்தனை எதிர்ப்புகள் கிளம்பினாலும் விடாமல் டுவீட் போடும் எச்.ராஜா
பெரியார் பற்றிய கருத்துகளை பதிவிட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையிலும் எச்.ராஜா விடாமல் அடுத்தடுத்து டுவீட்களை பதிவிட்டு வருகிறார்.
Recommended Video

சென்னை: பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்த நிலையில் எச்.ராஜா மீண்டும் தனது கவனத்தை ரஜினியின் பக்கம் திருப்பி டுவீட் போட்டுள்ளார்.
திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சியிழந்ததை அடுத்து அங்கிருந்த லெனின் சிலை அகற்றப்பட்டது போல் தமிழகத்திலும் திராவிட கட்சிகளின் ஆட்சி முடிவுக்கு வரும் போது பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்ற அர்த்தத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.

இதற்கு கடும் கண்டனங்கள் நிலவின. பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் காது கொடுத்து கேட்க முடியாது அளவுக்கு பாரபட்சம் இல்லாத கண்டனங்கள் மலை போல் குவிந்தன. இதுபோதாகுறைக்கு அரசியல் கட்சிகளும் தங்கள் பங்குக்கு திட்டி தீர்த்தன.
இதையடுத்து அவர் தனது பதவியை டெலிட் செய்துவிட்டார். இந்நிலையில் மீண்டும் ஒரு டுவீட் போட்டுள்ளார். பெரியார் பற்றிய கருத்துக்கு எதிர்ப்பு வந்ததும் மெல்ல ரஜினிபக்கம் திசையை திருப்பியுள்ளார் ராஜா.
அவர் போட்ட டுவீட்டில் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என திரு. ரஜினி காந்த் அவர்கள் கூறியுள்ளது உண்மை. ஏனெனில் செல்வி ஜெயலலிதா அவர்கள் மறைவிற்குப் பின்பு கூட திமுக மீது யாருக்கும் நம்பிக்கை வரவில்லை என்பதையே RKநகர் எடுத்துக் காட்டியுள்ளது என்றார் அவர்.
யார் எத்தனை விமர்சனம் செய்தாலும் விடாமல் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக உள்ளார்.












Click it and Unblock the Notifications